திருவக்கரை வக்கிரகாளியம்மன்

திருவக்கரை வக்கிரகாளியம்மன்
thiruvakkarai-vakrakaliamman

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
             

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்கு ஆகாதே என்றார்.

காலையில் பூசை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரமளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றினான். அவன் எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள்.

அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தைக் கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது.- அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.

அதன்படி மகாவிஷ்ணு ஈஸ்வரியை அழைத்து அசுரனை கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பெரிய உருவம் எடுத்து மகாவிஷ்ணு யோசனைப்படி வக்கிர துர்முகியை அழித்து பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

வக்கிரசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்குமுகமான காளியின் எதிரில் வக்கிரசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும் இது. திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.