வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

* வாழ்வென்பது உயிர் உள்ளவரை.
* தேவைக்கு செலவிடு.

* அனுபவிக்க தகுந்தன அனுபவி.

* இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

* இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

* போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.

* ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

* மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

* உயிர் பிரிய தான் வாழ்வு; ஒரு நாள் பிரியும்.

* சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

* உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.
* உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.

* உன் குழந்தைகளை பேணு.

* அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி.

* அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

* பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட; பாசமாய் இருந்தாலும்,
பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,
உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.

* அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள்;
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்;

* உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம், பொறுத்து கொள்.

* அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை, அன்பை அறியார்.

* அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

* இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு;
ஆனால், நிலைமையை அறிந்து அளவோடு கொடு.
* எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,
* எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி வைத்திராதே!
* நீ, எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.
* எனவே கொடுப்பதை கொடுத்து விடு, தரவேண்டியதை பிறகு கொடு.

* மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,
* மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.
* அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.
* பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
* நண்பர்களிடம் அளவளாவு.
* நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி;
* இறை பக்தி கொண்டு; குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்.
* இன்னும்; இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்; சுலபமாக ஓடிவிடும்.
* வாழ்வை கண்டு களி! ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!

* நான்கு நபர்களை புறக்கணி!

மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

* நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!

 பொய்யன்
 துரோகி
 பொறாமைக்கைரன்
 மமதை பிடித்தவன்

* நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

அனாதை
 ஏழை
 முதியவர்
 நோயாளி

* நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!

 மனைவி
 பிள்ளைகள்
 குடும்பம்
 சேவகன்

* நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!

 பொறுமை
 சாந்த குணம்
 அறிவு
 அன்பு

* நான்கு நபர்களை வெறுக்காதே!

 தாய்
 தந்தை
 சகோதரன்
 சகோதரி

*நான்கு விசயங்களை குறை!

 உணவு
 தூக்கம்
 சோம்பல்
 பேச்சு

* நான்கு விசயங்களை தூக்கிப்போடு!

 துக்கம்
 கவலை
 இயலாமை
 கஞ்சத்தனம்

* நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!

 மனத்தூய்மை உள்ளவன்
 வாக்கை நிறைவேற்றுபவன்
 கண்ணியமானவன்
 உண்மையாளன்

* நான்கு விசயங்கள் செய்!
     தியானம் , யோகா
    நூல் வாசிப்பு
    உடற்பயிற்சி
     சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்