தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம்

தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம்!.. இன்னும் ஏகப்பட்ட டிப்ஸ் இருக்குதுங்க….

மீன் வளர்ப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் மகிழ்ச்சியைத் தருபவை. வியாபார நிலையங்களின் முன் மீன் தொட்டியை வைத்து அதில் சிறு சிறு தங்கநிற மீன்களை வளர்ப்பதால் வியாபாரம் பெருகும். வாடிக்கையாளர்களும் அதிகம் வருவார்கள்.

உணவு விடுதியின் முன் வைப்பது மிகவும் சிறந்ததாகும். இதை வியாபார நிலையத்திற்கு முன் அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும். மீனின் அசைவுகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். அமைதியை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உணவு நிலையம், சூப்பர் மார்கெட், வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் இடங்கள், துணிக்கடை, ரெடிமேட் கடை போன்றவற்றில் வைக்கலாம். பழ வகைகள் விற்கும் கடை, காய்கறி விற்கும் இடங்களில் வைப்பதால் வியாபாரம் பெருகும்.

மீன் தொட்டியை இரும்பு அல்லது மர நாற்காலி செய்து அதில் தான் வைக்க வேண்டும். தரையில் வைக்க கூடாது.

மீன்கள் சுறுசுறுப்பு, வலிமை, வெற்றியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இரண்டு மீன்கள் இணையாக நீந்திச் செல்வது ஒற்றுமையைக் குறிப்பதாகும். மீன் தொட்டியை கட்டிடத்தில் வைப்பது செல்வ செழிப்பை அதிகரிக்கும். நம்மைச் சுற்றி இரண்டு வகையான சக்தியின் ஓட்டம் இருப்பதாகவும் அது தூங்கும் போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் உருவாகும்.

மீன்கள் கண்களை திறந்த நிலையிலேயே தூங்கும் தன்மை கொண்டது. இதனால் என்றும் விழித்துக் கொண்டிருப்பதால் தீய சக்தியை நுழைய விடாது.

கட்டிடத்திலுள்ளவர்கள் வெளியே சென்று இருக்கும் நிலையில் மீன்கள் உள்ளே இருப்பதால் சக்தி உள்ளே இருந்து கொண்டிருக்கும் என்பதாகும். மீன்கள் யோகத்தையும் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

கட்டிடத்தில் மீன் தொட்டிகள் வைப்பதால் இயற்கையின் மாற்றங்களை எளிதில் அறிய முடியும். தீய சக்தியை உடன் இழுத்து, தீமையை ஏற்றுக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை காப்பாற்றுகிறது. தீயசக்திகளை எதிர் கொள்வதால் தான் இறந்து தியாகம் செய்து மற்றவர்களை காப்பாற்றுகிறது.

காலை, மாலை தோட்ட வேலை செய்து மன அழுத்தத்தை குறைத்து அமைதியைதரும். மீன் வளர்ப்பது இதே பலனைத் தரும். அமைதியற்ற சூழ்நிலையில் மீன் தொட்டிகளில் மீன்களின் நடமாட்டத்தை கண்டால் மன அமைதியை பெறலாம். வியாபார நிலையங்களில்தங்க மீன்களை இணையாக வளர்க்கலாம். வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். மீன்தொட்டிகளில் காற்று வெளியேற்றும் சாதனங்களை வைத்தால் தண்ணீரில் காற்று குமிழ்கள் வெளிவந்து கொண்டே இருக்கும்.

தொட்டிகள் சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ இருக்கலாம். எப்பொழுதும் கண்ணாடிகளை துடைத்து மீன்கள் வெளியே தெரியும்படிவைத்திருக்க வேண்டும். அதனுள் இயற்கையான செடிகள், மீன் பாசி, சங்கு, கூழாங்கற்கள்போன்றவற்றை வைக்கலாம். இறந்த மீன்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும். அதற்குப்பதிலாக வேறு மீன்களை உடன் தொட்டியில் விட வேண்டும். வடக்கு சுவர் அல்லது தென்கிழக்கு சுவரை ஒட்டி வைக்கலாம். தெற்குப் பக்கம் வைப்பது நல்லதல்ல.

வாசலுக்கு அருகில் உள்ளே வைப்பது நலம் தரும். படுக்கை அறை, படிக்கும் அறை, சமையல் அறை இவற்றில் வைக்கக் கூடாது. வரவேற்பறையில் வைக்கலாம். அலுவலகம், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டிடங்களில் வரவேற்பறையில் வைக்கலாம். சிவப்பு நிறமீன்கள் வளமையையும், பச்சைநிற மீன்கள் வளர்ச்சியையும், மஞ்சள் நிற மீன்கள் செயல்திறனையும் வளர்க்கும். மீன்களை ஒற்றைப்படையாக வைக்க வேண்டும். 4 ஜோடிகளுடன் ஒருகறுப்பு மீனையும் வளர்த்தால் அதிர்ஷ்டம் எனப்படும்.

தங்க மீன்கள் யோகத்தை தரும். வேகமாக இனப்பெருக்கம் செய்யும் மீன்களை வளர்க்கக்கூடாது. ஏஞ்சல் மீனும் கூடாது. தன் இனத்தை சாப்பிடும் மீன்களையும் வளர்க்கக் கூடாது